உறங்கும் உண்மைகள்
தேடிய உண்மைகளோ
உறக்கத்தில் ஆங்காங்கே
விழிக்க வைக்க முயற்சித்தேன்
விடியல் கழிந்ததுதான் மிச்சம்.
வீதிகள் தோறும் குழித்தோண்டி
புதைத்துக் கொண்டிருந்தனர் எல்லோரும்.
ஆண்டவனும் அமைதியானார்
அளவில்லா குழிகளாலே.
கள்ளத்தன மயக்கத்தில்
மயங்கிக் கிடந்ததோ அத்தனையும்?
பகுத்தறிய நேரமின்றி
புறப்பட்டான் புதைத்துவர மற்றொருவன்.
நாடகமாய் காட்சிகள்
நிறைவேறிக்கொண்டிருந்தது பல இடத்தில்.
எந்த அடி பட்டாலது
விழிக்குமென தெரியவில்லை.
எனக்குள்ளும் பல உண்மைகள்
உறங்கிக் கொண்டிருக்கிறது அமைதியாக.
என்றுதான் விழித்திடுமோ
உறக்கத்திலிருந்து உண்மைகள்?
விழித்தால் புவி தாங்குமோ?
புவி பறந்து போய் விடுமோ?
--
ஆக்கம்:-
தேடிய உண்மைகளோ
உறக்கத்தில் ஆங்காங்கே
விழிக்க வைக்க முயற்சித்தேன்
விடியல் கழிந்ததுதான் மிச்சம்.
வீதிகள் தோறும் குழித்தோண்டி
புதைத்துக் கொண்டிருந்தனர் எல்லோரும்.
ஆண்டவனும் அமைதியானார்
அளவில்லா குழிகளாலே.
கள்ளத்தன மயக்கத்தில்
மயங்கிக் கிடந்ததோ அத்தனையும்?
பகுத்தறிய நேரமின்றி
புறப்பட்டான் புதைத்துவர மற்றொருவன்.
நாடகமாய் காட்சிகள்
நிறைவேறிக்கொண்டிருந்தது பல இடத்தில்.
எந்த அடி பட்டாலது
விழிக்குமென தெரியவில்லை.
எனக்குள்ளும் பல உண்மைகள்
உறங்கிக் கொண்டிருக்கிறது அமைதியாக.
என்றுதான் விழித்திடுமோ
உறக்கத்திலிருந்து உண்மைகள்?
விழித்தால் புவி தாங்குமோ?
புவி பறந்து போய் விடுமோ?
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment