Translate

Friday, December 15, 2017

அப்பனே! அப்பனே!!


முந்தானை முடிச்சுக்குள்ளே
முன்னூறு கதையிருக்கும்.
அத்தனையும் திறந்து விட்டால்
அணை முழுதாய் உடைந்து விடும்.
மற்றொன்றும் மறைந்திருக்கும்
மர்மமாய் அதுவிருக்கும்.
அவிழ்த்து விட நீ பார்த்தால்
அழிந்திடுவாய் அத்துடனே. 🔥⛈️🌪️
ஆனான மனிதரெல்லாம்
அமிழ்ந்து விட்டார் அதனுள்ளே.
பட்ட கதைகள் பல உணர்ந்து
பகிர்ந்து கொள்கிறேன் உம்முடனே.
பயங்கொண்டு நீ ஒது(டு)ங்காதே
பாய்ந்து விடு துணிவாக.
பக்குவமாய் அதிலிருந்து
மீண்டு வருவாய் வெற்றியுடனே. 🌹🌹

வாழ்த்துகள் அப்பனே.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: