நேற்றைய பொழுதை
கழித்தாய் இறைவா!
இன்றைய பொழுதை
எம்முடன் கழிப்பாய்.
நேற்றைய பொழுதில்
நடைத்திய இறைவா!
இன்றைய பொழுதிலும்
நல்வழி படுத்து.
ஒன்றுடன் ஒன்றாய்
என்றதை இணைத்து,
கூடி பெருகி வாழ்ந்திடவும்
நாடும் வீடும் நலம் பெறவும்
நல்வழி படுத்தி காப்பாயே.
இறையருள் வேண்டி
இறைவனைத் துதித்தேன்,
இன்றைய பொழுது
இனிமையாய் கழிய.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
#06\07\2006ல் எழுதியது
No comments:
Post a Comment