என்னை வெறுக்கின்ற உன்னை
நானும் வெறுக்கிறேன்
அன்புடனும் பாசமுடனும்.
என்னை நினைக்காத உன்னை
நானும் நினைக்கக்கூடாதென
நினைக்கிறேன் எந்நேரமும்.
மருந்து அருந்துகையில்
மந்தியை நினைக்கக்கூடாதென்பது போல.
நீ காதலித்த போது
பெருகிய கவிதை ஊற்று,
வெறுத்த போது
வரண்டு விட்டது இது போல.
30\01\2007
No comments:
Post a Comment