🌲🌲
வந்திங்கு உதித்தவரை
வானிலிருந்து வழி காட்ட,
ஒளி பிடித்து புறப்பட்டார்
ஒளிரும் தேவனை துதிப்பாட.
நாளிது மகிழ்வாக,
நாளெல்லாம் நலமாக,
ஆசீரளித்தார் கரமுயர்த்தி
அண்டிய அனைவருக்கும்.
அருட்பெரும் ஒளியாளர்
அமைதி கொண்ட நிலையாளர்.
ஆரவாரம் ஏதுமின்றி
அருட்பார்வையில் உய்வித்தார்.
பாடங்களை போதித்தார்
பாவங்கள் கழிந்தோட.
பிரார்த்திப்போம் நாள்தோறும்
பரிசுத்த போதகரை.
உலகிலுள்ள அனைத்து கிருஸ்துவ மக்களுக்கும், நண்பர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். 💐💐💐💐💐💐💐💐
அன்புடன்
தவப்புதல்வன் 🙏
No comments:
Post a Comment