பாதி விழிப்பு
பாதி உறக்கம்
இயக்கம் - மயக்கம்
அனுபவத்தால் நீ
அனுபவத்தில் நான்
மலை - மடு
அணைத்தாய் நீ
அணைப்பில் நான்
காமம் - தாகம்
அழகிய உருவில் நீ
பெரிய உருவில் நான்
சிலை – மலை
உடைப்படுவதற்கு அது
உரைப்பதற்கு இது
கல் – சாணைக்கல்
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment