#எல்லாமே_தலை 😲😲😲
தலைப்பிட்ட நாளில்
தலைகளாய் நிறைந்திருக்க,
தலையாய் நான்
தலைமையில் தான்.
தலைமை ஏற்று நான்
தலையிட்டதால் தான்.
தலையாட்டி பொம்மையாய் நான்
தலையாட்டியதால் தான்.
தலைப்பானேன் நான்
தலையாலே தான்
தலை மறைவாய் நான்
தலை தப்பாது தான்.
தலைப்பிலே நான்
தலைப்பிட்டதுதான் மிச்சம்.
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment