Translate

Wednesday, December 6, 2017

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்



கன்னி வாழ்க்கை
கரை மாறிய நாளிது.
மங்கையாய் கானம் பாடி விட்டு
மனைவியாய் கரம் பிடித்த நாளிது.
மங்கல இசை இடையே
மாங்கல்யம் தரித்த நாளிது.
மாதவம் ஈடேற
மாலையிட்ட நாளிது.
கட்டிய கோட்டைகளுடன்
கட்டியணைத்த நாளிது.
புரண்டோடும் நினைவுகளை
புரட்டிப் பார்க்கும் நாளிது.
இணையாய் என்றேன்றும்
இன்புற்று வாழ்ந்திருக்க,
இணையில்லா தலைவியாய்
இல்லத்தரசியாய் புகழடைய,
நலனும் மகிழ்வும் இறையருளால்
நீங்காது நிலைத்திருக்க,
உம் திருமணநாளில் நல்வாழ்த்துகள் கூறி
மகிழ்கிறேன் நான், எமதினிய தோழியே.

நட்புடன்
தவப்புதல்வன்,

A.M.பத்ரி நாராயணன்

No comments: