சந்திர ஒளியலைகள்
சுந்தர வதனம் பட்டு
சந்திர மனம் மகிழ்ந்த
சுகந்த நினைவுகள்
பலவிருக்க,
வசந்தத்தின் வாசமது
வந்தமர்ந்த நேரமது,
வாழ்விலந்த மாற்றமது
நேர்ந்தந்த
பொழுதினிலும்,
நேசத்திற்கு குறைவின்றி
நெடியயிந்த பயணத்தில்
நெகிழ்கின்ற
மகிழ்வுகளுடன்
நீண்ட பல நினைவுகளுடன்,
வாழுகின்ற உம் வாழ்வது
நலமும் மகிழ்வும்
இணைக்கொண்டு
நீண்டதொரு தொடராக
வாழ்வமைய
நித்தமும் உடனிருந்து
நீங்காது அருள் புரிய.
நீலகண்டன் தாள்
பணிந்தோம்
வாழ்த்தும் நாள் கடந்து
இடைவெளி நீண்டு விட,,
நினைவிலிருத்தி
பகிர்ந்து கொண்டோம்
உம் ஆசிகள் பெற்றிடவே.
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துகள்
நமஸ்காரங்கள்
No comments:
Post a Comment