25\12\2017
பூவையரிடும் பூக்கோலம்
புலரும் நேரத்தில் புதுக்கோலம்
மலரும் மாலையாய் மாக்கோலம்.
மாவினாலிட்ட மலர் கோலம்.
புவிக்கு அழகு செய்த இக்கோலம்
பூச்சூடி பார்த்திட்ட இவ்விரல் கோலம்.
விழிகளுக்கு விருந்தாய் பெருங்கோலம்
விரிந்து எங்கும் கிடந்தது பெருமாக்கோலம்
#தையல்களிட்ட கோலம்
மனத்தில் தைத்திட்ட கோலம்.
தையலாய் இணைந்திட்ட கோலம்
தையற்கலைஞராய் மாற்றிய கோலம்.
காலத்தினால் மாறியது மாக்கோலம்
கல்மாவாய் மாறியது இக்கோலம்.
உயிர்களுக்கு உணவாய் மாக்கோலம்
உணர்வற்று போனதால் கல்மாக்கோலம்
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
#தையல் = பெண்
No comments:
Post a Comment