விளையாட்டாய் கைதொழில் கற்போம்
இல்லத்தை அலங்கர்ப்போம்.
இனிதான வாழ்வின் பொருளுணர
ஓராயிரம் வழியிருக்கு திரைக்குள்ளே.
தொடர்களில் நம் வாழ்வு அழிவு கொள்ள
ஒப்படைப்பது சரிதானோ?
அதிரடியாய் எடுத்திடுவோம் - நமை
ஆள்வதைத் தவிர்த்திடுவோம்.
அன்னியமாய் ஒதுக்குகிடுவோம்
அதிகாரம் நம் கையில்.
போதையில் ஆடவன் மூழ்கியிருந்தால்
வருந்துமே அவன் குடும்பம்.
தொடரெனும் போதையிலே.
பெண்ணினம் மூழ்கியிருந்தால்
வருத்தத்தை எங்குரைக்க?
(வருந்தாதோ அவள் குடும்பம்?)
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment