அன்றாட கனவுகளது
அனுதின நிகழ்வுகளது
ஆதவன் எரித்தாலும்
அந்தி மயங்கும் நேரமாயினும்,
அலசியபடி அங்கு நான்
ஆழ்ந்திருப்பேன் எனக்குள்ளே.
ஆவலுடன் என் மனது
அசைப்போடும் உன் நினைவுகளை,
ஆற்றங்கரை ஓரமா அது
அலையாடும் ஓசைக் கேட்க.
ஆரவாரம் ஏதுமில்லா
அமைதியான நிலையிங்கு.
அமர்த்திருப்பேன்
அழகான சிலையாக ( நீ சொன்னது) 😊
ஆனந்தமாய் நிலையாக
அகண்ட கிணற்று மேடையிலே
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment