Translate

Wednesday, June 6, 2007

வீண்தானா ???........

வாழ்க்கைச் சென்றது
வசதிகள்ன்றி - ஆனால்
மனமோ குதித்தது
மமதையில் திரிந்தது
வெற்றியென நினைத்து.

ஊன்றிய விதைகள்
செழிப்புடன் வளர்ந்து
வளமுடனிருக்க.

அறுவடைக்குச் சென்றால்
அடி மட்டுமிருக்க.
வேரற்ற மரம் போல்
கீழே சரிந்தான்.

காத்த சொத்தை
காப்பாற்ற நினைக்க,
விளைந்த பொருளோ
வீணாகும் நிலையில்!
விதைத்தவன் அவனோ
விக்கித்து நின்றான்.

No comments: