Translate

Thursday, June 21, 2007

தேவையா திருத்தம் ?

நான் வரையும் - உன்
உயிரோவியத்தை
அழித்து விட முயலாதே
சரியில்லையென்று.
உன் நினைவால்
கல்லை உண்டாலும்
கற்கண்டாய் இனிக்கும்
எனக்கு,
என் கைவண்ணத்திலே
குறையிருந்தாலும்
மாறாதே உன் அழகு
என் மனக்கண்ணிலே.




  • இக்கவிதைக்கு கருத்து பதித்தவர்கள்.
    • Jaya Nallapan
      ‎.
      உனக்குப் பிடித்தது,
      எனக்குப் பிடிக்க
      வில்லையே?

      ஆயிரம் அர்த்தங்களை
      உள்ளடக்கி நான் வரைந்த
      அழகிய உயிரோவியம்
      எனக்காகவே துளிர்த்திடவே...

      வழி மேல் விழி வைத்துக்
      காத்திருக்கிறேன்,
      என்னவரின் வருவுக்காக...
      ~ஜெயா நல்லப்பன்~
      Wednesday at 2:32pm · · 4 people
    • Munuswami Muthuraman ‎/// மாறாதே உன் அழகு என் மனக் கண்ணிலே /// மிக நன்று .
      Wednesday at 3:39pm · · 4 people
    • M Venkatesan MscMphil மாறாதே உன் அழகு
      என் மனக்கண்ணிலே.
      Wednesday at 5:20pm · · 3 people
    • Shanmuga Murthy
      என்னில் என்னுள்ளே
      என்றும் வாழும் உன்
      ஓவியம் காவியமாய்
      காவியம் ஓவியமாய்
      நினைவில் பழுதில்லை
      வரைவில் குறையில்லை
      நானே நீயானேன்
      நீயே நானானாய்.
      Wednesday at 6:32pm · · 3 people
    • Sathiabama Sandaran Satia மாறாதே.. உங்கள் கவிதையின் அழகு! என்றென்றும்!! அருமை பத்ரி சார்...
      Wednesday at 8:22pm · · 2 people
    • Sakthi Sakthithasan அன்பின் நணபரே,
      மனதின் நினைவுகளை மறையாவண்ணம் வடித்திருக்கிறீர்கள்
      அன்புடன்
      சக்தி
      Yesterday at 4:55am · · 2 people
    • Kaniappan Padmanaban thanks, very nice...
      Yesterday at 12:53pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Jaya Nallapan :- கவிதையில் உணர்வுகளை உள்ளடக்கி கருத்து பதித்ததற்கு மகிழ்ச்சி சகோதரி.
      8 minutes ago ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Munuswami Muthuraman:- மகிழ்ச்சி நண்பரே.
      6 minutes ago ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Shanmuga Murthy:- "நானே நீயானேன்
      நீயே நானானாய்"

      கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா.
      4 minutes ago ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Sathiabama Sandaran Satia:- "மாறாதே.. உங்கள் கவிதையின் அழகு! என்றென்றும்!! அருமை பத்ரி சார்...''

      மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி. என்றென்றும் உங்கள் அன்பு தொடர வேண்டும். எம் கவிதைகள் மிளிர வேண்டும்.
      about a minute ago ·


      இக்கவிதையை விரும்பியவர்கள்:-

No comments: