Translate

Wednesday, June 27, 2007

கிடைக்குமா விடை ????

நேசிக்கிறேன் உனை 
நீங்கா நினைவுடன்.
யோசிக்க வைக்கிறாய் பலவாறு 
அள்ளிக் கொடுக்க மனமிருந்தும்,
ஏனோ கருமியாய். 

கூடும் செயலென நான் நினைத்தேன்.
கூடா நட்பென நீ சென்றாய்.
அறியச் செய்ய நான் முயன்றேன்.
அறிய நீயும் விரும்பவில்லை.

விளக்கம் தரவும் விளையாமல்
விலகி விட்டாய் எனை விட்டு.
விளக்கம் அறியா என் மனமும்,
எப்படிச் சொல்வேன் படும்பாட்டை.

No comments: