Translate

Thursday, June 21, 2007

நீயொரு அழகிய......!!!!!!!

அழகிய பேயே! ஏன்
உன்னைத் தொடர வைக்கிறாய்?

என் அழிவாகவே தெரிகிறதே,
உன்னைத் தொடர்வதாலென.

எப்படி துடைத்தெறிவேன்
உன் நினைவுகளை?

எங்கே சென்றடைய
உன்னை மறந்து விட?

எதனால் தடுமாறுகிறேன்
உன் மோகன நினைவுகளாலா?

என்னை உணர்கிறேன்
உன்னை மறக்க முடியாமலே.

எதற்கு இந்த வேதனை
உன்னை இழப்பதால் தானே!

ஏன் வதைக்கிறாய் ?
வாய் திறந்துச் சொல்.

No comments: