Translate

Thursday, June 21, 2007

இலக்கியம்

உன் கதையை
இலக்கியமென
நான் எழுத
இடைமறித்து
நீயே எழுதலாமா-
உன் கதையை ?

எழுதிக் கொள்
உட்கதையை.
விட்டு விடு
என்னிடம்

மூலக்கதையை.


இக்கவிதைக்கு கருத்து பதித்தவர்கள்:-
  • Mylswamy Annadurai likes this.
    • Krishnamal Krish
      உன் கதையை

      இலக்கியமென

      நான் எழுத

      இடைமறித்து

      நீயே எழுதலாமா-

      உன் கதையை ?// அருமை

      எனக்கும் எழுதத்தான் ஆசை கொஞ்சம் நிஜத்தோடு கற்பனையாய் ......படிப்பவர்கள் சொந்தக்கதையோ.... சோகக்கதையோ என முத்திரைப் பதித்து விடுவார்களோவென முடிவுரையை உங்களிடமே கொடுத்து விடுகிறேன்....
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ஆகா... என்ன அருமையாய் சொன்னாய் . எனக்கே அத்தகைய கேள்வி கருத்தாய், சந்திப்பு என்னும் வலைப்பதிவர் கீழே உள்ளதை எழுதியிருந்தார்.

      சொந்தக் கதை...
      சோகக் கதை...
      இந்தக் கதை...
      எந்தக் கதை!

      அப்படியிருக்கையில், உம் நிலையைச் சொல்ல வேண்டியத்தில்லை. இருப்பினும் மற்றவர்களைப் பற்றி நினைக்காமல் நமது எண்ணங்களை பதிப்பாக வெளியிடுவதில் தவறே இல்லை. என்னுடைய நினைவுகளை எத்தனையோ எழுதாமலேயே தவற விட்டிருக்கிறேன். இப்போழுது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதனால் நம்மை மதிக்கின்ற நண்பர்களுடனாவது நம் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளவது தவறில்லை. எனவே தயங்காமல் எழுத, பதிக்கத் துவங்கு சகோதரி. வாழ்த்துக்கள்.
      16 hours ago · · 1 person
    • Krishnamal Krish நன்றிங்க பத்ரி அண்ணா.
      16 hours ago · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M விரைவில் சகோதரியின் அருமையான பதிவை வாசிக்கலாம். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
      16 hours ago ·
    • Krishnamal Krish சரிங்க அண்ணா.
      16 hours ago · · 1 person


      இக்கவிதைக்கு விருப்பம் தெரிவித்தவர்:-
      நமது மதிப்பிற்குரிய விண்வெளித்துறை விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai )

3 comments:

சந்திப்பு said...

சொந்தக் கதை...
சோகக் கதை...
இந்தக் கதை...
எந்தக் கதை!

Dhavappudhalvan said...
This comment has been removed by the author.
Dhavappudhalvan said...

வேண்டாமே அந்த கதை!
நீங்க கேட்ட இந்த கதை.