Translate

Saturday, June 23, 2007

தவறு யாரிடம் ?

உன் வருகை போது
என் வாழ்க்கையில்
மீண்டுமொரு பருவகாற்று
என நினைத்திருந்தேன்.
நம்பிக்கையெனும்
ஈரப்பசையையும்
உறுஞ்சிய போதுதான்
தெரிந்தது - நீயொரு
வரண்டகாற்றென்று.

உன் வருகையின் போது
கதகதப்பை உணர்ந்தேன்,
பனிகாலத்திற்கு பிறகு
வந்த வசந்தகாலமென்று.
என்னை வெப்பத்தினால்
பொசிக்கியப் போதுதான்
தெரிந்தது - நீயொரு
கோடைகாலமென்று.

உன் வருகையின் போது
செழிக்கச் செய்யும்
பன்னிர் துளிகளென
நினைத்திருந்தேன்,
என்னை கருக்கிய போதுதான்
தெரிந்தது - நீயொரு
அமிலமென்று.

உன் வருகையின் போது
தாலாட்டும் பூங்காற்றென
நினைத்திருந்தேன்.
என்னை, வேரோடு
அசைத்தப் போதுதான்
தெரிந்தது - நீயொரு
புயற்காற்றென்று.

No comments: