Translate

Thursday, June 21, 2007

தேடிய பின் தாடி!.......

கேளாத சொல் தேடி
சொல்லாத பொருள் தேடி
இல்லாத இடம் தேடி
இருக்கின்ற உனைத் தேடி
காணாத காட்சிகளை
கண்டு விட
துடிக்கின்ற உனக்காக
நானும் அதை நாடி
படாதபாடுப் பட்டு
கொண்டு வந்தேன் ஓடி
அருமையை அறியாமல்
பெருமையைத் தெரியாமல்
போட்டு விட்டாய் மூலையிலே
சொல்லி விட்டேன்
கோபத்திலே போடி,
போடியென்றாலும்
போகமாட்டாய்.
வாடியென்றாலும்
வர மாட்டாய்.
நிலை குலைந்து
நிற்க செய்தாய்.
வளர்த்து விட்டேன்
நிலையாய், 'தாடி'.

2 comments:

Anonymous said...

போடியென்றாலும்
போகமாட்டாய்.
வாடியென்றாலும்
வர மாட்டாய்.oho!...ho!...

Dhavappudhalvan said...

மகிழ்ச்சி சகோதரி தங்களின் ரசிப்புக்கு.