ஆடை உனதை
அவிழ்த்தது யார்?
அதை
நீ தடுக்காமல்,
அனுமதித்து ஏன் நின்றாய்?
அம்மா என்று பலமாக
அலறல் ஒன்று விடுத்திருந்தால்,
அவிழ்பாரோ அவரும், உன்
ஆடையை துணிவாக.
அணியாமல் ஏன் நிற்கின்றாய்?
அசிங்கமென தெரியாதா?
அசட்டையாய்
இன்னும் இருக்காதே,
ஹி..ஹி.. ஹீ..
இப்படியுமா, இருப்பாய்
சொல்லியும் கூட…?
அருமையான, என்
அழகிய, செல்லச் சுட்டி பையனே!
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment