Translate

Monday, January 22, 2018

பொறுத்துக் கொள்வேன்


நமக்கான தாய் பணியிலிருக்க,
உனை அரவணைக்கும் தாயாய் நானிப்பேன்.
பாலூட்டி சோறூட்டி உடனிருப்பேன்.
உடன் விளையாடும் தோழியாய் உருக்கொள்வேன்.

நீ படுத்துறங்கி ஓய்வெடுக்க
என் மடி தூளியாகும்.
இடையிலே துயில் களைந்து
நீயழுதால்….
நானெழுப்பும் ஒலி உனக்கு சங்கீதமாகும்.

உனக்கொரு தோழியாய் நானிருக்க,
எனக்கொரு உயிருள்ள பொம்மையாய் நீ.
பெண்ணாய் பிறந்ததினால்,
கூடியதே பெரும்பொறுப்பு.
நானும் சிறு பெண்ணாய் இருந்தும்
உன்னை பாதுகாக்கும் பணிப்பெண்ணாய்.

அக்கரை உள்ள அக்காவாய் ஒரு நேரம்.
தொடர்ந்து நீயழுதால்
அடி வாங்கும் அடிமையாய் நான்.
கோபமோ பொங்கும் அப்பொழுது.
அத்தனையும் மறந்து போகும் -நீ
எனை ஒட்டிக்கொள்ளும் அந்நேரம்.


ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.


No comments: