பொங்கலோ பொங்கலென
தைப்பொங்கலை வரவேற்று
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
புதிதாக புலர்ந்திட்டவும்
புது மலராய் மலர்ந்திட்டவும்
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
பழையதெல்லாம் கழிந்தோட
புதியதெல்லாம் நலம் வழங்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
மும்மாரி மழை பொழிந்து
முப்போகம் விளைச்சலெடுக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
முன்னோர்கள் ஆசிகளெல்லாம்
முன் வந்து பறையறைய
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
மாற்றங்களில் நலனிருக்க
மக்களுக்கு மகிழ்வளிக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
புலருகின்ற வேளையிலே
தொடங்குமிந்த புத்துணர்ச்சி
நாள் முழுதும் தொடர்ந்திருக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
நோயில்லா நாட்களாக
நொடியின்றி நிலைத்திருக்க
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
தமிழர்களின் பெருநாளாம்
தைத்திங்கள் திருநாளை
வரவு சொல்லி கும்மியடி - நீ
வரவு சொல்லி கும்மியடி
உயிருக்கு உணவளிக்கும்
உழவரை நாம் போற்றிட
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
உற்ற துணையாய் உடனிருந்து
உழைக்குமந்த உயிர்களுக்கும்
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
வற்றாத ஆறுகளாய்
வளமென்றும் அள்ளித்தர
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
தமிழகத்தின் பெருமைகள்
தரணியெல்லாம் விரிந்து பரவ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
சேதங்கள் ஏதுமின்றி
சேமங்களாய் நிறைந்திருக்க
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
காற்றாய் கரையும் நாட்களில்
களிப்பெங்கும் சூழ்ந்திட
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
இயற்கை அனைத்தும் நன்மையளித்து
இல்லறம் செழிக்க, இறைவனை துதித்து நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி - நீ
வாழ்த்துச் சொல்லி கும்மியடி
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment