கண்ணெதிரில் அவளிருக்க
கருத்துணர தவறவிட்டேன்.
தூழாவுகின்ற அவள் நிலையில்
தொலைந்தது என் மனம் தான்
குளக்கரையில் அவளிருக்க
குறுகிபோனது அவள் நினைவில்
தலையிலிருந்த பூச்சரங்கள்
அவளுடன் சரசமாட,
எட்டி பார்க்கிறது பூச்சரங்கள்
ஏக்கமுடன் பூக்கூடையில்.
நீரின் சலனத்தில்
நீந்துகிறது அவளுருவம்.
பருவத்து கன்னியர்க்கென
பிரார்த்தனை ஒன்றிருக்க,
நினைவுகளோ பிரசவ வலிப்போல்
தினம் தினம் நச்சரிக்க,
எண்ணங்களோ அலைகிறது
அவளுக்கென ஓர் உறவை.
நினைவுகளோ கூடுகிறது
நித்தம் நித்தம் புதிதாக.
கன்னியவள் கழித்திட்டாள்
காதலிலின்றி கணவன் தேடி.
பிரார்த்தனைகள் மனம் நிறைய
பின் தொடர்கிறது அவளுடனே.
இன்றுமவள் வந்திருந்தாள்
இறைவனிடத்தில் செலுத்திச் செல்ல.
குளத்துநீரில் விரல் அலைய
நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.
விரல்கள் வழியே நீரிலிட்டாள்
விரைந்து வந்து கைப்பிடிக்க.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment