என்றுணர்வர்?
கற்றிருந்தும் நமை அழிக்கும்
மூடர்களை
காசும் பணமுமா உயிர் காக்கும்.
புவி என் வளங்காத்து
பூரிப்புடன் நீர் வார்த்து
பதமாய் எனை கீறி,
பக்குவமாய் உனையூன்றி
பாதுகாப்பாய் வளர்தெடுத்தால்
பந்தியிட நாமிருப்போம்
பசியாற்றி மகிழ்விப்போம்.
பாவியவர்கள் உணர்வாரோ?
வருமந்த தலைமுறைகளுக்கு
வளமையதைத் தருவாரோ? – இல்லை
வரண்ட நிலங்களை அளிப்பாரோ?
வழிந்தோடும் நீரணைத்து
வாய்காலில் பாயவிட்டு,
நிலமதை நனைய விட்டு,
இயற்கையான நல்லுரத்தை
உயிர் பசி போல, நிலப்பசி போக்க
இதமாக பாவி விட்டு
இனியதொரு விளைச்சளெடுக்க
உழைக்குமந்த விவசாயிக்கு
ஒத்துழைப்பு அவர்களித்தால்
உறுதுணையாய் நாமிருப்போம்.
இயற்கைகள் ஒன்றிணைந்து
இன்ப வாழ்வை அவர்களுக்களிப்போம்.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment