நினைவுகளில் காட்சிகள்
நிறைந்த ஆறாய் ஓடுது.
நித்த நித்த வளர்ச்சியெல்லாம்
நிற்காமல் மனதில் ஓடுது.
நீண்ட அந்த காலமோ
குறுகித்தான் போனது.
வசந்தத்தின் உறைவிடமாய்
வாழ்வது தொடர்ந்து செல்ல,
வந்தணைக்கும் குடும்பமதில்
வாசனைகள் பரவியிருக்க,
வளமுடன் நலன்களும்
வாழ்வனைத்தும் நிலைத்திருக்க,
வாழ்த்தினோம் இன்றுமை - நீ
வந்துதித்த நாளின்றில்.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்
.
No comments:
Post a Comment