Translate

Thursday, January 4, 2018

என்று திறப்பாய் மறுக்கதவை?

🤔

நாளெல்லாம் உனை நினைத்து
நான் பாட வேண்டும்.
நல்லதை நானெண்ணி
நான் வாழ வேண்டும்.
நடத்தி வைத்து காப்பது
நீயாக வேண்டும்.
நலம்பட நான் வாழ்ந்து
உனையடைய வேண்டும்.
நீண்ட என் வாழ்வில்
நீயின்றி யாரிருப்பார்.
நீர்த்து போகும் வேளையிலே
கடையேற்றி நீயருள வேண்டும்.
உலகமெல்லாம் நீயாக
உள்ளத்திலும் உனை வைத்தேன்.
உருகும் என் வாழ்வை
என்று நீ அணைப்பாயோ?
மங்காத ஒளி சுடரே
மயக்கத்தில் வாழ்விருக்க,
மட்டில்லா மகிழ்வடைய
மாற்றம் தந்து அருள்வாயே.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: