நட்பென தோளிலிட்டாய்
நல்லுறவென தலையசைத்தேன்.
நஞ்சுகளோ உன் மனத்தில்
நயவஞ்சகம் செயலனைத்தில்.
மூச்சுகளிலும்
உள்ளுறைய,
மூழ்கினேன் உணராமல்.
முட்புதரான உன்
நினைவுகள்
முனைகளோ வெகு கூர்மை.
திட்டங்களை நீ
போட,
தீட்டும்போது நானினைப்பேன்
திறமை உனது பெரிதென்று
– அறியவில்லை
தீண்டதகாத நட்பென்று.
No comments:
Post a Comment