Translate

Saturday, July 20, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Mrs.Thiagalakshmi Badri




சொல்ல நினைப்பது
சொற்களில் புகுமோ?
நினைவுகளின் வேகம்
படைப்புக்கு இல்லை.
குலுங்கும் சோழிகளின்
ஓசையைப் போல,
குற்றால அருவியின்
குழுமையைப் போல,
குலுங்கி அதிருமே
குரலொலி மகிழ்வில்.
குழந்தையாய் இருந்து
குமரியுமானாய் - அதையும்
தாண்டி, தலைவியுமானாய்.
தாலாட்டி மகிழ்ந்தாய்
தாயாயிருந்து. - இன்று
உணர்த்துமே செயல்கள்,
உம் உயரிய நிலையை.
இறைவனின் அருளோ
இறுதி வரை இருக்க,
பணிவுடன் அவனின்
பாதங்களில் பணிந்து,
பிரார்த்தித்தோம் உமக்கு
பிரியமுடன் யாமே.
அசைகள் போடும் - உம்
ஆனந்த நிலையில்
பிறந்தநாள் இன்றில்
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
நிலையான நலனுடன்
மகிழ்வாக வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகளே!

ஆசிர்வாதத்துடன்,
மாமா, அத்தை.

No comments: