உருவொன்று இருந்தாலும்
உயிரில்லா நிலையாலே
குற்றங்களை நீ சுமக்க
விடுதலையாய் நினைக்கின்றேன். .
நெஞ்சில், அந்த நினைவுகளோ
மெல்லத்தான் நுழைகிறது
உறுத்தும் அந்நிலையை
நீயென உணராமல்
துரத்திவிட பார்க்கின்றேன்.
கள்ளமில்லா குழந்தை உள்ளம்
உடலைப்போல் வளராமல்
கருகித்தான் போகிறது,
ஆசைகளின் பெருக்கத்தால்.
நினைவுகளில் அடைத்துக் கொண்டு
களைகளாய் வளர்கிறது
நீரின்றி போனாலும் வளமாய் - ஏனோ
அதற்கு மட்டும் விதிவிலக்கு
நீ படைத்த உயிரினமாய்
நானிருக்க,
கட்டுகளை அறுத்துக்கொண்டு
பாய்ந்து செல்ல நினைக்கின்றேன்.
மெல்ல திசைத்திருப்பி
இதுதான் நல்வழியென விடுவாயோ
செல்லும் வழியே செல் – அது
உன் தலைவிதியென விடுவாயோ
No comments:
Post a Comment