கொஞ்சி குலவ,
குவலயம் மகிழ,
வான்முகிழ் போலே,
வந்திவன் உதிக்க.
ஏந்திய கைகளோ
துளியாய் மாற,
விரிந்த இதழ்களில்
புன்னகை தவழ,
மார்போடணைத்து
ஊட்டும் உதிரம்,
வையகம் போற்ற
வாழ வைக்கும்.
கனவு கண்ட
கருவறை சுமைகள்,
காற்றிலே கரைந்து
உருவாய் பிறக்க,
மகிழ்வுகள் யாவும்
முகங்களில் அனைத்தும்.
ஓடி வந்து
ஒட்டிக் கொள்ளும்
வாழ்த்தினோம் இன்று
குலமது செழிக்க,
இறைவன் அருளால் - நலமாய்
ஈன்றதை அடுத்து.
ஸ்ரீலதா உனக்கு
எங்கள் நல்லாசிகள்,
அப்பா அம்மா.
Uncle and Aunt
No comments:
Post a Comment