Translate

Tuesday, September 2, 2014

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - BBS பாவா & SS அக்கா

வாழ்க்கை 

சொல்லும் கதைகள் ஆயிரம் 
அத்தனையும் பாடுமே பாயிரம்.
சொல்லாமல் சொல்லுமே 
சொக்க வைத்த நினைவுகள்.
பாடாமல் பாடுமே 
பாவலனாய் இருந்து.
மெய்யது தனியாக,
மனமது ஒன்றாக,
குறைவில மகிழ்வுடன்,
குதி போடும் நலனுடன்,
காலமெல்லாம் இணையாக,
பிணைந்திருக்கும் உறவிது.
நிலைத்திருந்து வாழவும்,
தங்கள் புகழ் உயரவும்,
இறை தரும் அருளினால்,
செல்வங்கள் பதினாறும் 
அளவில பணிவுடன்
அண்டி உம்மிடம் வாழுமே.
தாள் பணிந்தோ ஆசி பெற,
தயங்காமல் தருவீரென.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 
BBS பாவா & SS அக்கா 

 --
பாசமுடன்,
A.M.பத்ரி நாராயணன் மற்றும் குடும்பத்தினர்.

No comments: