Translate

Monday, September 22, 2014

இதற்கென்ன பெயர்?




ஆழ்ந்த உறக்கத்திலும் 
ஆனந்தமான நினைவு.
அருகின்றி இருக்கலாம் 
அருகிடுமோ உறவு.
இழைகளாய் ஊடுருவி 
இசைப்பொழிகிறதே தேன்மழையாய்.
ஈரேழு பிறவிகள் எவ்வுயிராயினும்   
ஈடுடையதாகுமோ இவ்வுயிர்.
உறவுக்கென்ன பெயரிட,
உயிருக்கு மேலானதை.
நாதமாய் ஒலிக்கட்டுமே 
நாளும் பொழுதும் என்றுமது.


இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே.

No comments: