மின்னலென திகைத்தேனே
மேகமில்லா பகற்பொழுதில்.
ஒலியிழந்து மீண்டதடா
கருவிழியால் தாக்கப்பட்டு.
-------
கனவிலே
நீ சிரிக்க,
உறக்கத்திலே
நான் பார்த்தேன்.
---------
மௌனமாய் உன் வார்த்தைகள்
சீண்டுகிறதே எனை.
மயக்கத்தில் ஆழ்த்துகிறதே
உறக்கத்திலும் எனை.
-----------
முடியுமா?
வளர்வதை வெட்ட
நகமும் முடியும் சரி.
அறிவையும், அனுபவத்தையும்?
No comments:
Post a Comment