Translate

Thursday, September 25, 2014

ஒரு நொடி - குறுங்கவிதைகள்



மின்னலென திகைத்தேனே
மேகமில்லா பகற்பொழுதில்.
ஒலியிழந்து மீண்டதடா
கருவிழியால் தாக்கப்பட்டு.
-------

கனவிலே
நீ சிரிக்க,
உறக்கத்திலே
நான் பார்த்தேன்.
 ---------

மௌனமாய் உன் வார்த்தைகள்  
சீண்டுகிறதே எனை.
மயக்கத்தில் ஆழ்த்துகிறதே
உறக்கத்திலும் எனை.
-----------

முடியுமா?

வளர்வதை வெட்ட
நகமும் முடியும் சரி.
அறிவையும், அனுபவத்தையும்?







No comments: