பணிகளோ விரைவாய் நடக்க,
பண்டங்கள் உருமாறி,
பட்சனங்களாய் உருவெடுக்க,
பரிமாறியது கைகள்
பந்தியாய் இல்லாவிடினும்.
பறந்தது எண்ணங்கள்
பறவையாய் சிறகடித்து,
பார்க்கும் பக்கமெல்லாம்
பரபரப்பாய் இயங்க,
பலரும் எறும்புகளாய்
பணியாற்ற ஓட,
பாதசாலையும் துடித்தது
பஞ்சு மெத்தையாய் இருக்க.
இனிய காலை நல்வாழ்த்துக்கள் நட்புகளே.
No comments:
Post a Comment