Translate

Wednesday, September 24, 2014

எப்படி சொல்வேன் ?






மொட்டவிழ்ந்து விரிந்த 
உன் விழியிமைகளை,
மென்மையாய்
தடவிக் கொடுத்தேன் 
இரவு வரை 
விழித்திருக்கப் போவதால்.

 இதைக் கண்டு 
பூவிதழாய் மலர்ந்து 
புன்னகைத்த - உன் 
தேன் சிந்தும் அதரங்களையும் 
சுவையால் சுவைக் கண்டு...
ஐய்யே.....
எப்படி சொல்வேன் 
ரசவாத காவியத்தை - நான் 
இலக்கணம் கற்காமல்.

No comments: