மொட்டவிழ்ந்து விரிந்த
உன் விழியிமைகளை,
மென்மையாய்
தடவிக் கொடுத்தேன்
இரவு வரை
விழித்திருக்கப் போவதால்.
இதைக் கண்டு
பூவிதழாய் மலர்ந்து
புன்னகைத்த - உன்
தேன் சிந்தும் அதரங்களையும்
சுவையால் சுவைக் கண்டு...
ஐய்யே.....
எப்படி சொல்வேன்
ரசவாத காவியத்தை - நான்
இலக்கணம் கற்காமல்.
No comments:
Post a Comment