Translate

Thursday, September 18, 2014

ஏனோ அலைந்தது?




வழியனுப்பி விட்டது 
நேற்றைய இரவு பொழுதை,
மனமும் விழிகளும்.

குறியின்றி தேடியது 
இமைகள் மூடியிருப்பினும் 
அங்குமிங்கும் 
விழிகள் மனமுடன் இணைந்து.

மண்டையிடியுடன் 
உடலும் சோர்ந்திருக்க,
விடிந்தும் தடையிடுகிறது 
விழிகள் 
இமைகளைத் திறக்க.

No comments: