Translate

Sunday, September 17, 2017

உங்களில் ஒருவன்



ஊற்றுகள் பெருக்கெடுக்கும் - நீர் 
உற்சாக குளியலிட.
உதறலின்றி வார்த்தைகளும் 
உருக்கொள்ளும் .விதவிதமாய்.

ஊக்கமுடன்  நீரிருக்க    
உமையவள் துணையுடனே 
உந்துதலாய் யாமிருந்து  
உரிமையுடன் கைக்கோர்ப்பேன் .

ஊரறிய நீரிருந்தால் 
உண்மையாய் குதுகளிப்பேன்.
உடலிலே குறைக்கொண்டோம் 
உள்ளத்தில் நிறைக்காண்போம்.

உயிரிடத்தில் பேதமின்றி 
உளமார நேசிப்போம்.
உயர்நிலை சென்றடைய
உறுதியுடன் கைக்கொடுப்போம் . 


-- 
ஆக்கம்:-
தவப்பதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்.

No comments: