ஊற்றுகள் பெருக்கெடுக்கும் - நீர்
உற்சாக குளியலிட.
உதறலின்றி வார்த்தைகளும்
உருக்கொள்ளும் .விதவிதமாய்.
ஊக்கமுடன் நீரிருக்க
உமையவள் துணையுடனே
உந்துதலாய் யாமிருந்து
உரிமையுடன் கைக்கோர்ப்பேன் .
ஊரறிய நீரிருந்தால்
உண்மையாய் குதுகளிப்பேன்.
உடலிலே குறைக்கொண்டோம்
உள்ளத்தில் நிறைக்காண்போம்.
உயிரிடத்தில் பேதமின்றி
உளமார நேசிப்போம்.
உயர்நிலை சென்றடைய
உறுதியுடன் கைக்கொடுப்போம் .
ஆக்கம்:-
தவப்பதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment