Translate

Tuesday, September 26, 2017

எங்கும் ஒற்றர்கள் - இன்றொரு தகவல்



சரியில்லா உடலால் 
அசதியில் நான்.
பகலிலும் படுத்தேன்
ஆழ்ந்த உறக்கம்
நேரம் கடக்க
அதிலிலும் கனவு
திடுக்கிட்டு விழித்தேன்
விழிகளை காட்ட
இமைகளோ மறுக்க
பார்வைக்கு வழியின்றி
ஒரு நிமிடம் தவித்தேன்.
விரல்களோ விரைந்து
இமைகளை பிரிக்க,
ஒளி கண்ட விழிகளோ
திடுக்கிட்டு விரிந்தது.
கனவின் பாதி
நிகழ்வில் இருக்க,
ஒற்றர் எங்கும்
நீக்கமற இருக்க.
அவர்களில் ஒருவனாய்
பொதுத்தளமும் இருக்க,
இதற்கு மேலே
இடமில்லை இங்கு.
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: