Translate

Saturday, September 16, 2017

முடிந்த கதை, முடியாத நினைவு.


முளை விட்ட குருத்துக்கு 
முலையிட்ட பாலுக்கு 
மூன்றிலை விடுமுன்னே 
முறித்துதான் போட்டு விட்டார்,
முறையிட வழியின்றி 
மூச்சடைக்க செய்து விட்டார். .

முன்னூறும் ஐந்நூறும் கொடுத்திட்டால் 
முடிந்திடுமா கதையனைத்தும்?
முறையிட்ட சொல்லுக்கு 
முறையில்லா பதிலாலே,
முடங்கித்தான் போனதடா 
மூன்றடி மண்ணுக்குள்.  


முறையிட அழைத்துப்போய் 
முறை தவற(ர) ஆனதினால் 
முறையிட போக்கின்றி 
முடிச்சிட்டாளோ அவள் வாழ்வை?
மூத்த தலைமுறையின்  
முணுமுணுப்பு கேட்குதடா 



-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: