முளை விட்ட குருத்துக்கு
முலையிட்ட பாலுக்கு
மூன்றிலை விடுமுன்னே
முறித்துதான் போட்டு விட்டார்,
முறையிட வழியின்றி
மூச்சடைக்க செய்து விட்டார். .
முன்னூறும் ஐந்நூறும் கொடுத்திட்டால்
முடிந்திடுமா கதையனைத்தும்?
முறையிட்ட சொல்லுக்கு
முறையில்லா பதிலாலே,
முடங்கித்தான் போனதடா
மூன்றடி மண்ணுக்குள்.
முறையிட அழைத்துப்போய்
முறை தவற(ர) ஆனதினால்
முறையிட போக்கின்றி
முடிச்சிட்டாளோ அவள் வாழ்வை?
மூத்த தலைமுறையின்
முணுமுணுப்பு கேட்குதடா
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment