Ramesh N
பிறவிகள் எடுக்காமல் இருக்கவே விரும்புகின்றேன்:
எடுத்த பிறவியை விட முடியாமல் இன்று வரை தவிக்கின்றேன்!
கோலமிட்டவன் அங்கிருக்க,
கோணலும் புள்ளிகளாய்
நாம் பிறப்பெடுக்க,
புது கோலம் போடும் வரை
பழைய கோலம் நாமிருப்போம்.
வடிவுகளை அவன் மாற்ற
ஒதுங்கியிருப்போம் அவன் நிழலில்.
மரமென்று ஒன்றிருந்தால்
உச்சியில் கிளையிருக்கும்
புவி பிளந்து வேரிருக்கும்.
வேரோ வெகுதுன்னும்
உச்சியோ சுடுதுன்னும்
அதனதன் நிலையிலே
ஆதங்கம் பல கொள்ளும்.
ஆண்டவனின் படைப்புகள்
அனைத்தும் ஒன்றானால்,
அமிர்தமும் விஷத்தையும்
நம்மிலே யாரறிவார்
வாழ்வினை சுவைத்திடுவோம்
வழியை மாற்று நண்பனே
வாழ்ந்து நாம் காட்டிடுவோம்
--
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
மாற்றுத்திறனாளர் நண்பன்.
No comments:
Post a Comment