கண்கள் உனது மின்னலடிக்க,
கவிதைகளை நான் வடிக்க
கண்ணெதிரே வந்தவளே
கனவாய் மறைந்து போனதெங்கே?
கன்னங்குழிய சிரித்து விட்டு,
கண்ணீரில் மிதக்க விட்டு,
கலக்கத்தில் நான் புலம்ப
காணாமல் போனதெங்கே?
கஸ்தூரி மனம் போல
கமழுமந்த உன் வாசம்.
காற்றிலே கலந்தது போல்
காதலை மறந்து ( துறந்து ) போனதெங்கே?
கலந்துரையாடிய நேரமெல்லாம்
காதினிலே எதிரொலிக்க,
கண் முன்னே இல்லையெனினும்
காணுகிறேன் மனத்தினிலே.
கடும் கல்லும் மண்ணாக
கரைந்து நானும் உனையடைய
கதை சொன்ன என் பைங்கிளியே
கவர்ந்து செல் எனை விரைவாக.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
#பொருத்தமான புகைப்படம் தேர்ந்தெடுத்து கொடுங்கள் நண்பர்களே....
No comments:
Post a Comment