சஷ்டியப்தபூர்த்தி
விழா
நாயகன்: சிர.A.M.பத்ரிநாராயணன்
நாயகி: சௌ.B.ராஜராஜேஸ்வரி
இடம்: A.V.R.திருமண
மஹால், சேலம். தேதி:27/06/2017. செவ்வாய் கிழமை
அற்புதத்தந்தை, அருமை அம்மையின் ஆருயிர் அருந்தவப் புதல்வனாம்
எங்கள் அன்பில் இணைந்த தம்பியே! பத்ரியே!!
ஆனந்தமாய் ஆதரவாய் அளவிலா
பலப்பணிகள் ஆராய்ந்து அர்பணித்த
எங்கள் தண்ணியாம்! தன்னிகரில்லா ராஜராஜேஸ்வரியே!
தங்கை தம்பிகளின் அண்ணனே! அண்ணியே!
தழைக்கவே சிறக்கவே வாழ்வீர்.
‘’ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் ‘’
‘’மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.’’
என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்குப்படி
அரும் புதல்விகளைப் புலர வைத்தீர்.
நல் பேரன், பேத்திகளைக் கண்டீர்.
நன்மையே நலம் புரிய விழைகிறீர்.
நாதனாம் நான்முகனும் நல்கவே நல்வாழ்வு
நண்பனாய் நல்லுறவாய் மனங்கவர் மன்னனாய்,
மாற்றுத்திறனாளரின் மார் உயர,
அங்கிங்கெனாதபடி செய்தொண்டு செம்மைப்பெற
ஆற்றுநீராய் பயணித்து அபிஷேகம் கண்டு
ஆனந்தத்தாண்டவமாடும் அருணசலேஸ்வரன்
அற்புதங்கள் பல காண அருளவும்,
கடந்து வந்த பாதையை படிகற்களாய் ஏற்று
அறுபதைக் காணும் தாங்கள்
ஆயிரம் பிறை கண்டு ஆனந்த வாழ்வும்
அளவிலா ஆயுளும் ஆரோக்கியமும் பெற,
அன்னையாம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரியின் அருளை வேண்டும்.
உளம் கவர்,
உடன் பிறப்புகள்.
No comments:
Post a Comment