Translate

Tuesday, September 19, 2017

சிரிப்பா சிரியுங்க!...


சிரிப்புகளைக் கொட்டட்டுமா?
சிந்தனையில் கோர்க்கட்டுமா?
 பந்தியில் பரிமாறி
பரவசப்ப படுத்தட்டுமா ? 
அரங்கத்தில் சிரிப்பலை 
அரங்கேற்ற உம் வலை.

 அல்லி, அள்ளி முடிச்சு வர,
அவதியில் அவனிருக்க,
அந்த பக்கம் வேறொருவன் பார்த்திருக்க,
அடிக்கண்ணில் மற்றொருவன் நோட்டமிட,
அடுக்கட்டுமாவென புதியவன் ஓடி வர,
அக்கப்போராய் இருக்குதப்பா...

அறைந்துவிட தோணுதப்பா,
ஆறரை விட்டாலும் 
அலறியவர் ஓடுவாரோ?
அடிகள் பல கொடுத்து 
அமுக்கி அவனை விடுவாரோ? - மன 
அழுத்தத்தில் அவனிருக்க 

ஆரவாரம் செய்தபடி 
அவர்கள் அங்கு நிலைத்திருக்க,
ஆனந்தமாய் ரசித்தபடி 
ஆராதிக்க முடியயவில்லை.
ஆண்டவனும் பார்த்திருக்க,
அத்தனையும் எக்குத்தப்பாய் நடக்குதப்பா.

அமைதியின்றி அவனிருக்க  - ஓர் 
ஆளைக் கண்டதும் 
அங்கிருந்த ஆட்களெல்லாம் 
ஆளுக்கோர்  திசை நோக்கி 
அச்சமுடன் பறந்து விட்டார்.
அவனும் காலை எடுத்து விட்டான் 

அப்புறம்தான் நினைத்துக் கொண்டான்,
அது அவனுடைய பொண்டாட்டி,
அவளுக்கு அவன் உரிமையினு. 
அவன் அவளை அணைத்தபடி 
அரங்கிற்குள் உள்நுழைய 
அச்சமயம் சிரிப்பலையால் அதிர்ந்தப்பா.

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: