Translate

Friday, October 25, 2013

நன்னெறி, அறநெறி கல்வியின் அவசியம்.






மதுரை காந்தி மியூசியம், ஒவ்வறொரு வருடமும் "காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றுத் தேர்வை" காந்தியடிகளின் நூற்றாண்டான 1969 முதல் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடத்தி வருகிறது.

இத்தேர்வு திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, காந்தியடிகளின் 'என் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகம் தரப்பட்டு, அதிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. வெறும் வாழ்க்கை வரலாறு தேர்வாக மட்டுமல்லாமல், மாணவர்களின் பண்பு நலன்களை வளர்க்கும் வகையில் தேர்வுகள் உள்ளன. ஆங்கிலத்திலும் இத்திட்டம் உள்ளது.

நன்னெறி, அறநெறி குறித்த ஈடுபாடு குறைந்து கொண்டே வருவதால், சமுதாயத்தில் ஏற்படும் குற்றங்களுக்கு காரணமாக உள்ளதால், மாணவர்களிடையே நன்னெறியையும் அறநெறியையும் வளர்க்கவும், உணர செய்யவும் இத்தேர்வு ஒரு முன்முயற்சியாக திகழ்கிறது.

தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர், செயலாளர், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை - 20 என்ற முகவரியி தொடர்புக் கொள்ளலாம்.


No comments: