Translate

Thursday, October 17, 2013

உலக வறுமை ஒழிப்பு தினம்



இன்று (17/10/2013) உலக வறுமை ஒழிப்பு தினம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி, உலகின் எந்த ஒரு மூலையிலும் வறுமையால் ஒருவர் பாதிக்கப்படுவது, அவரின் மனித உரிமை பறிக்கப்படுகிறது என சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடி வந்தார். இவரது முயற்சியால் தான் " உலக வறுமை ஒழிப்பு தினம்" 1987, அக்டோபர் 17ம் தேதி உருவாகியது. பிறகு ஐ.நா.சபையினால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.

பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதும், அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, இருப்பிட வசதி, மருத்துவம், சுகாதாரம், கல்வி, உடை, வேலை வாய்ப்பு எனும் அடிப்படை வசதிகள் கிடைக்க செய்வதே முக்கிய கருத்தாகும். இவை இல்லாத அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாகவே கருதப்படுவர். இந்த வசதிகள் எதுவுமே இல்லாத மிக பெரும்பாலான மக்கள் வாழும் இந்த நாட்டில் உள்ள, நாட்டை நிர்வாகிக்கின்ற அதிகார வர்கத்தினர், ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு ரூபாய் 20ம், 30 ம் சம்பாதித்தாலே வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லாதவர்கள் என நிர்ணயிக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கு சொல்ல.

மக்கள் ஏழ்மைநிலையில் தள்ளபடுவதற்கு முக்கியமாக அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், புதிய தொலைநோக்கு திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் இருப்பது, கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என பல காரணங்கள்.

இன்று ஒரே நாளில் வறுமையை ஒழிக்க முடியாது. இருப்பினும் சிறப்பான தொலைநோக்கு திட்டங்கள் பலவற்றை விரைவாக தீட்டி, , திறமையானவர்களின் பங்களிப்புடன், நேர்மையாக செயல்படுத்தினால், இன்றைய மக்கள் வறுமையிலிருந்து சிறிது சிறிதாக மீளவும், வருங்கால சந்ததியினர் வளமாக வாழவும் வழி கிடைக்கும். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?"
என பாடலாசிரியர் மருதகாசி எழுதியது படி, வறுமை கோட்டிலேயே வசிப்பதை ஒழிக்கலாம்..கல்வி வழங்குதலும், ஆரம்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தலும் வன்முறைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

பின்குறிப்பு: எத்தனை படங்களை பதிப்பது. பார்க்கப் பார்க்க கண்கள் குளமாகிறது.

திரைபடம் : விவசாயி
இசை : மகாதேவன்
பாடல் : மருதகாசி
பாடியவர் : T.m.s

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

No comments: