Translate

Thursday, October 24, 2013

விழியற்றவரும் நெசவு செய்ய கைத்தறி.



பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நெசவு செய்ய கைத்தறியைக் கண்டு பிடித்துள்ளார், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரில் பேராசிரியராக பணியாற்றும், பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன்.

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் என்ற இடத்தில் 'கிராமின் சராசிக் பிரதிஸ்தான்' என்ற அமைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, நெசவு நெய்யும் பயிற்சி அளிப்பதுடன்,வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. 

இங்கு 40க்கும்  மேற்பட்ட  பார்வையற்ற இளைஞர்கள், பழைய சேலைகளை 4 செ.மீ.,    அளவுக்கு ரிப்பனாக வெட்டி, கைப்பின்னல் முறையில் கையாலேயே தரைவிரிப்பு தயாரிக்கும் வேலை செய்கின்றனர். கைப்பின்னல் என்பதால், ஒரு நாளைக்கு,இரண்டு தரைவிரிப்புகளை தயாரித்து, 70 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி, வறுமையில் வாடினர்.


அவர்களின் வறுமையைப் போக்க நினைத்த தொண்டு நிறுவனம், "ரூட் டேக்" என்னும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவிடம் பார்வையற்றவர்கள், எளிதில் பயன்படுத்தி, தரை விரிப்பை தயாரிக்கும் விதத்தில், புதிய கைத்தறி இயந்திரத்தை கண்டு பிடித்து தர கேட்டுக் கொண்டனர்.

  கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவின் அறிவுறுத்தல் படி, சாதாரணமாக இருக்கும் கைத்தறியின் வடிவமைப்பை சற்று மாற்றி, எடை அதிகமுள்ள பகுதியின் எடையையும் குறைத்து, பார்வையற்றவர்கள் இயக்கம் வகையில் மாற்றியதுடன், பார்வையற்ற நேசவாலரை அழைத்து, எந்த சிரமமும் இல்லாமல் தறியை இயக்க முடிகிறதாவென சோத்தித்து, தேவைக்கேற்ப மேலும் மாற்றி இலகுவாக இயக்கும் வகையில்  தயாரித்துள்ளார்.


இவர் கண்டுபிடித்துள்ள கைத்தறியின் மூலம், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆறு தரைவிரிப்புகளை தயாரிக்கலாம். அதனால் 70 ரூபாய் வருமானம் ஈட்டியவர்கள், இனி 250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இப்பொழுது, அங்கு பணியாற்றும் அனைத்து பார்வையற்ற நெசவாளர்களுக்கும், கைத்தறி இயந்திரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

பார்வையற்றவர்களுக்கான கைத்தரியைக் கண்டுபிடித்துள்ள பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன் அவர்களை நாமும் பாராட்டுவோம். அவரின் கண்டுபிடிப்பை வெளியிட்டு சிறப்பித்த புதியதலைமுறை இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வோம். 

  

No comments: