Translate

Saturday, March 28, 2015

விடியுமோ





தவமிருந்த காலமெல்லாம்

மலையேறி போச்சுதையா.

தண்ணீரைத் தேடி - என்

கண்களும் பூத்ததையா.

மரத்தின் உச்சியிலே - நான்

அமர்ந்து பார்க்கின்றேன்.

எட்டிய தூரமெல்லாம்

நீரில்லா நிலையையே காண்கின்றேன்.

மீன் தின்ற காலமெல்லாம்

மீண்டும் என்று வந்திடுமோ

பசி தீர்க்க தேடி நான்

புழு தின்று வாழுகிறேன்.

குளம் குட்டை அத்தனையும்

கட்டடமாய் மாறிவிட்டால்,

குழிநீரில் மீனின்றி- எம்மினமும்

குழுக்குழுவாய் அழிந்திடுமே.

கொஞ்சி குழாவிய 

குடும்பமது அழிந்ததினால்
வேதனையில் 

தனியாய் நானும் வாடுகிறேன்.

நீங்கள் அறியா வண்ணம் 

எத்தனையோ உதவிகளை செய்கின்றோம்.

பறவையினம் வாழ்ந்திடவே

மனத்தை நீங்கள் திறந்து வைப்பீர்.

தென்றலாய் உள்நுழைந்து - உமை

கவலையின்றி வாழ வைப்போம்.

No comments: