Translate

Saturday, March 7, 2015

கணக்கனாய்

கணக்கனாய் இருந்த என்னை 
கற்பனையில் மூழ்க வைத்தாய்.
கணக்கெழுதும் காகிதத்தில் 
கவியெழுத தூண்டி  விட்டாய்.
கண் மூடிய அடுத்த நொடி 
கனவு காண செய்து விட்டாய்.
கண் அகலாவண்ணம் - நீ  
கடிவாளம் பூட்டி விட்டாய்.
 கடவுளிடம் உனைக் கேட்டு 
கடுந்தவம் செய்ய விட்டாய்.
 கடைக்கண் சாடைக்காட்டி - எனை 
கடையேற்றிக் கொண்டாயே.
இனி தடையேதுமின்றி 
இன்பம் தாண்டவமாடுமே.
தளிர் இளங்கொடியாய் - நீயெனை 
தழுவிக் கொள்ள 
தாங்கிடுவேனே தளராமல் 
தாலாட்டு ஆட்டியப்படி.

No comments: