Translate

Saturday, March 7, 2015

ஒன்பது முறை




எட்டியிருந்து பார்த்தவுடன் 
ஏடுகளில் பதிக்க வைத்தாய்.
கிட்டயிருந்து உனைக் காண 
கிடந்து எனை தவிக்க விட்டாய்.
கடைக்கண்  பார்வைப்பட 
கடைக்கோடியில் நின்றிருந்தேன்.
தெருவில்  கடந்து செல்கையிலே 
தேர்ந்தெடுத்துக் கொண்டாயோ?
ஒரு குடம் நீரெடுக்க 
ஒன்பது முறை கவிழ்த்து விட்டாய்.
காத்திருந்த மனமது 
காற்றினிலே மிதந்ததம்மா.
கவிழ்ந்தோடிய நீர் போல 
கலகலப்பாய் ஆனேனம்மா. 

No comments: