Translate

Wednesday, March 11, 2015

நட்பே! - குறுங்கவிதைகள்

நட்பே! 

நீ, எனை மறந்தாலும்
நாடி வந்து வாழ்த்துகிறேன்.
உனை உணர்வாயென.

******************

காணவில்லை..

உனைக் காணாப் பொழுதுகளில்
எனைத் தேடி அலைகின்றேன்.

&&&&&&&&&&&&&&&


வில்லங்கம்

கண்டதை மெயென்றேன்.
காணாததைப் பொயென்றேன்
மேற்பூச்சை அறியாமல்.  
*$$*******************

வானத்திலிருந்து 

 தேவதையாய் நீ வந்து
தேன் மழையை பொழிய வைத்து
தெவிட்டா நிலைக்கொடுத்து
மதுரமாய் சுவைக்கச் செய்தாய்.



மகிழ்வான நாளாக அமைய வாழ்த்துக்கள் நட்புகளே.

No comments: